தேனி: தேனி அல்லிநகரம் பகுதியில் கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். கிணற்றில் உள்ள மரக்கிளையில் சிக்கி, சிறுமி உயிர் தப்பினார். அஜய் குமார் என்ற 21 வயது இளைஞர் அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி இருவரும் காதலித்து வந்தனர். உறவினர்கள் என்றாலும் சகோதர – சகோதரி உறவு முறை என்பதால் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு வர இம்முடிவை எடுத்துள்ளனர்.