Saturday, December 2, 2023
Home » தமிழக மருத்துவ மாணவன் மதன்குமார் இறப்பில் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜார்க்கண்ட் முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மருத்துவ மாணவன் மதன்குமார் இறப்பில் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜார்க்கண்ட் முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

by Francis

சென்னை: தமிழக மருத்துவ மாணவன் மதன்குமார் இறந்தது குறித்து உரிய முறையில் விசாரித்து, இறப்பிற்கு நீதி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவ மாணவன் மதன்குமார் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இறந்ததற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்த மதன்குமார் (28) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு தடயவியல் மருத்துவம் படித்து வந்த நிலையில், காணாமல் போய் பின்னர் அவரது உடல் எரிந்த நிலையில் சடலமாக விடுதியின் பின்புறம் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் ஜார்க்கண்ட மாநில அரசுடன் தொடர்பு கொண்டு மதன்குமாரின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொண்டதன் அடிப்படையில், அவரது உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரால் அஞ்சலி செலுத்தப்பட்டு நேற்று காலையில் தகனம் செய்யப்பட்டது. மேலும் மதன்குமார் மர்மான முறையில் இறந்த சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் மாநில காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த துயரமான சூழ்நிலையில் மதன்குமாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்தாருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். மதன்குமார் இறந்தது குறித்து விசாரணையை விரைந்து எடுத்து, அவரது இறப்பிற்கு நீதி கிடைக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?