ராமேஸ்வரம்: இலங்கையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விசைப்படகுகளில் மீட்க மத்திய அரசு மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் தங்கச்சியம்படத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மீனவர் சங்கம் மாவட்ட செயலாளர் சேஷுராஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் போர்க்கள அடைப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தபட்டுள்ளது. 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக தீர்மானகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றனர்.