ஸ்பெயின்: ஸ்பெயினில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆக்சியானா நிறுவன நிர்வாகிகளான ரஃபேல் மாட்டியோ, மேனுவல் மஞ்சன் வில்டா சந்தித்து பேசினர். தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் முதலீடு செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ரோக்கா நிறுவனத்தின் இயக்குநர்களான கார்லோஸ் வாலஸ்குயிஸ், நிர்மல்குமார் ஆகியோர் சந்தித்து பேசினர். பெருந்துறையில் புதிய குழாய்கள், இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.