சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் தொடங்கி உள்ளது. இருப்பினும் சென்னை, திருவண்ணாமலை, பரங்கிப்பேட்டை பகுதிகளில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளதால் அங்கு நல்ல மழை பெய்து வருகிறது. அதையொட்டி தமிழ்நாட்டிலும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டத்தில் 30மிமீ மழை பெய்துள்ளது. இதற்கிடையே, சென்னை, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருப்பத்தூர், நீலகிரி மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சென்னை, திருவண்ணாமலை, பரங்கிப்பேட்டை பகுதிகளில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 16ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்ப நிலை 102 டிகிரி பாரன்ஹீட் முதல் 106 டிகிரி பாரன்ஹீட் வரை ஓரிரு இடங்களில் இருக்கும்.