Thursday, May 16, 2024
Home » தென் சீன கடல் பகுதியில் நான்கு நாடுகளின் கடற்படை கூட்டுப்பயிற்சி: கடல் பாதுகாப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்த நடவடிக்கை

தென் சீன கடல் பகுதியில் நான்கு நாடுகளின் கடற்படை கூட்டுப்பயிற்சி: கடல் பாதுகாப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்த நடவடிக்கை

by Lavanya

தென் சீனா: தென் சீன பகுதியில் ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய 4 நாடுகளின் கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்கள், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும், கடல் வழியாகப் பயணம் செய்வதற்கும் பறக்கும் உரிமையை நிலைநிறுத்துவதற்கும் கடலில் கூட்டுப் பயிற்சிகளை நடத்துவதாக அறிவித்தனர். ஒரு முக்கிய கப்பல் பாதையான தென் சீனக் கடலில் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் சீனா நீண்ட காலமாக நிலப்பிரதேச கருத்துக்களை கொண்டுள்ளது.

குறிப்பாக பிலிப்பைன்ஸுடன் கடந்த ஆண்டு மோதல்கள் வெடித்துள்ளன. ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்கா பிலிப்பைன்ஸுடன் இணைந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கடற்படை பயிற்சிகளுக்கு சீனா வெளிப்படையான பதில் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ரோந்துப் பணிகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும், “தென் சீனக் கடலை சீர்குலைக்கும் மற்றும் ஹாட்ஸ்பாட்களை உருவாக்கும் அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் கூறியது.

 

You may also like

Leave a Comment

one × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi