மணப்பாறை: மணப்பாறை அருகே அணியாப்பூரில் இன்று முதல் மே 20 வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது என திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். வீரமலைபாளையத்தில் உள்ள மையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. துப்பாக்கி சுடும் பயிற்சி நேரத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகளை அழைத்து செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.