சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: கடந்த ஜூலை மாதம் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணத்தை 2.18சதவீதம் நேரடியாக உயர்த்திய தமிழக அரசு, நிலையான கட்டணம், காலையிலும், மாலையிலும் 6 மணி முதல் 10 மணி வரை உச்ச மின் பயன்பாட்டு நேரக்கட்டணம் என பல வழிகளில் மறைமுகமாகவும் உயர்த்தியுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள யூனிட்டுக்கு ரூ.1.15 மின்கட்டண உயர்வை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள தொழில் நிறுவனங்கள், நிலைக்கட்டண உயர்வு, உச்ச மின் பயன்பாட்டு நேரக் கட்டணம், சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான கட்டணம் ஆகியவற்றை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் 27ம் தேதி நடத்தும் மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு பாமக ஆதரவளிக்கிறது.