சிவகங்கை: சிவகங்கையில் உள்ள பையூர் பழமலைநகரில் நரிக்குறவர்(காட்டுராஜா) சமூகத்தை சேர்ந்த 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி, மீனாட்சி, மதுரைவீரன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கடந்த ஒரு மாதமாக விரதமிருந்து கடந்த ஆக.28ல் இத்திருவிழாவிற்கு காப்பு கட்டினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்ததை குடிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கியது. எருமை மாடுகளின் கழுத்தில் அரிவாளால் வெட்டி அதிலிருந்து பீய்ச்சியடிக்கும் ரத்தத்தை உறிஞ்சி குடித்தனர். இவ்விழா பல தலைமுறைகளாக தொடர்கிறது.