வேட்டவலம்: திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை சேர்ந்தவர் பிரசாந்த்(28). சென்னை பூந்தமல்லி, வெள்ளவேடு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். கவுரி(27) என்ற மனைவியும், தமிழ் அமுதன் (2) என்ற மகனும் உள்ளனர். இவருக்கு கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை பிரசாந்த் வீட்டின் அருகே ஆணைக்கட்டு சாவடி பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கல்குவாரியில் இறங்கி பிரசாந்தின் சடலத்தை மீட்டனர்.
குட்டையில் குதித்து போலீஸ்காரர் தற்கொலை
previous post