1 கப் பச்சரிசி
1 கப் அவல்
1/4 கப் உளுந்தம் பருப்பு
1 டீஸ்பூன் வெந்தயம்
1 கப் தயிர்
தேவையான அளவு உப்பு.
செய்முறை
பச்சரிசி, கெட்டி அவல், உளுந்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை எடுத்து தயாராக வைக்கவும். இவை எல்லாவற்றையும் தண்ணீரில் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். தயிரில் தண்ணீர் கலந்து பீடர் வைத்து நன்கு அடித்து மோராகச் செய்து வைத்துக்கொள்ளவும். பின்னர் தோசைக்கு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மோரில் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து ஒரு பௌலில் வைக்கவும். உப்பு கலந்து எட்டு மணி நேரம் கழித்து எடுக்கவும். அதன்பிறகு தோசை தவாவை சூடுசெய்து மாவை ஊற்றி மெல்லிசான தோசை தேய்க்கவும். மேலே எண்ணெய் தூவி வேக விடவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் வெந்ததும் எடுத்தால் அவல்தோசை தயார்.