டெல்லி: பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மல்யுத்த வீராங்கனைக்கு நீதி கிடைக்கவில்லை என்று குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் தெரிவித்திருக்கிறார். தனக்கு நீதி கிடைக்காததாலேயே மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார். நாட்டுக்காக பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நடக்கும்? என்று விஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.