கரூர்: குளித்தலை நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பெண் கல்வி நிறுவனங்கள், மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது அவர்களின் கடமை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை முடியும் வரை சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.