டெல்லி : செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு, வழக்கை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்த நிலையில் வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.