சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில், இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் இணைந்து ஹான்ஸ் செய்டல் பவுன்டேசன் உதவியுடன், மனிதர்கள் கடத்தல் மற்றும் வியாபாரம் பற்றிய ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி கல்லூரி பேராசிரியர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பதிவாளர் ஏழுமலை பங்கேற்றார். இதில், பேராசிரியர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சியில் என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் வனிதா அகர்வால், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி நாயர் பங்கேற்றனர்.