Saturday, May 11, 2024
Home » சீமான் மீது புகார் அளிக்க வந்த வீரலட்சுமி: நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

சீமான் மீது புகார் அளிக்க வந்த வீரலட்சுமி: நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

by Mahaprabhu

சென்னை: இயக்குநர் சீமான் மீது புகார் அளிக்க போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த வீரலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் நிறுவன தலைவர் வீரலட்சுமி ஆதரவாக உள்ளார்., இதனால் இயக்குநர் சீமான் குறித்து வீரலட்சுமி பொது இடங்களில் அவதூறாக பேசியதாக, சீமான் தரப்பு வீரலட்சுமிக்கு ரூ.1 கோடி மான நஷ்ட இழப்பு கேட்டு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் வீரலட்சுமி தான் நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருப்பதால் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் இயக்குநர் சீமானால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர் வீரலட்சுமி புகார் அளிக்க வந்தார். வீரலட்சுமி கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளிக்க வரும் தகவல் அறிந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கமிஷனர் அலுவலகம் முன்பு குவிந்தனர். இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

உடனே கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் திட்டமிட்டப்படி வீரலட்சுமி, இயக்குநர் சீமான் மீது புகார் அளிக்க கமிஷனர் அலுவலகம் வந்தார். இதை பார்த்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் வீரலட்சுமியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பிறகு வீரலட்சுமியை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாதுகாப்புடன் உள்ளே அழைத்து சென்றனர். இருந்தாலும், நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அலுவலக நுழைவு வாயில் முன்பு முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

twelve − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi