Friday, May 17, 2024
Home » மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி கூடுதல் வகுப்பறை ஊராட்சி செயலக கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி கூடுதல் வகுப்பறை ஊராட்சி செயலக கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

by Karthik Yash

பொன்னேரி: சோழவரம் ஒன்றியம், பொன்னேரி தொகுதி ஞாயிறு ஊராட்சியில் குழந்தை நேயப்பள்ளி கூட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2022-23 திட்டத்தின் மூலம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதலாக இரண்டு வகுப்பறைகள் கட்டிடம் கட்டப்பட்டது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக, நேற்று திறந்து வைத்தார். அதை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயன்பாட்டிற்காக ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் எல்லையன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் மொழியரிசி செல்வம் முன்னிலையில் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் துர்கா, பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரியபாளையம்: ஆரணி பேரூராட்சி மற்றும் மல்லியங்குப்பம் ஊராட்சி பகுதிகளில் 2022-23ம் நிதியாண்டின் குழந்தை நேயபள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மாணவ, மாணவியருக்கு, இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், மல்லியங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி, ஆரணி திமுக நகர செயலாளர் முத்து, வார்டு கவுன்சிலர் கண்ணதாசன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப் பூண்டி சட்டமன்ற தொகுதி சுண்ணாம்பு குளம், எளாவூர், ஏ.என்.குப்பம் ஆகிய பகுதிகளில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி, தேர்வழி, ரெட்டம்பேடு உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற அலுவலகமும், ஆத்துப்பாக்கம் பூவாலம்பேடு, பெரியபுலியூர் ஆகிய பகுதிகளில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சியில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, சுண்ணாம்புகுளம் ஊராட்சி தலைவர் எஸ்.எம்.ரவி, பிடிஓக்கள் சந்திரசேகர், அமிழ்தமன்னன் ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

அப்போது, ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், மகளிர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர். எளாவூர் மகாலிங்கம் நகர் பகுதியில் அரசு பள்ளி கட்டிடத்தை எளாவூர் ஊராட்சி தலைவர் வள்ளிமுருகேசன், வார்டு உறுப்பினர் தேவி, சங்கர் ரிப்பன் திறந்து வைத்தனர். ஊராட்சி செயலர் சேகர் உடனிருந்தார். தேர்வழி ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஊராட்சி தலைவர் கிரிஜா குமார் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, ஊராட்சி பகுதியைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் முதல்வருக்கும், சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜனுக்கும் நன்றி தெரிவித்தனர்.

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், நேமம் ஊராட்சியில் ஊராட்சி செயலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ஜெ.பிரேம்நாத், துணை பெருந்தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) எஸ்.காந்திமதிநாதன், ஊராட்சி துணை தலைவர் விஜயா ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் என்.உமாசங்கரி நாகராஜ், கே.தமிழழகன், வி.சிவகாமி வடிவேல், எம்.உதயகுமார், எஸ்.முருகன், டி.விஜயா தாமோதரன், எம்.நிரோஷா ரமேஷ், சி.சரவணன், ஊராட்சி செயலாளர் எஸ்.ரீமாவதி பங்கேற்றனர். ஒன்றிய குழு பெருந்தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

வெள்ளியூர் ஊராட்சியில் குழந்தை நேயபள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, மாணவர்கள் பயன்பாட்டிற்காக கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், திமுக ஒன்றிய செயலாளர் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், ஒன்றியக் குழு துணை பெருந்தலைவர் எம்.பார்கத்துல்லாகான், வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் டி.முரளி கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் டி.எம்.எஸ்.வேலு, வருவாய் அலுவலர் பொன்மலர், கிராம நிர்வாக அலுவலர் ராதிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், முத்துகொண்டாபுரம் ஊராட்சியில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார். இதற்கான விழாவில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஓ.என்.சுகபுத்ரா, செயற்பொறியாளர் வ.ராஜவேல், திமுக ஒன்றிய செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன், உதவி திட்ட அலுவலர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விஜயகுமாரி சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் எம்.ரமேஷ், பொறியாளர் ராணி, பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி, திமுக ஒன்றிய நிர்வாகிகள் பி.சரவணன், குமார், கமலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொன்னேரி: சோழவரம் ஒன்றியம், பொன்னேரி தொகுதி ஞாயிறு ஊராட்சியில் குழந்தை நேயப்பள்ளி கூட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2022-23 திட்டத்தின் மூலம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதலாக இரண்டு வகுப்பறைகள் கட்டிடம் கட்டப்பட்டது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக, நேற்று திறந்து வைத்தார். அதை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயன்பாட்டிற்காக ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் எல்லையன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் மொழியரிசி செல்வம் முன்னிலையில் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் துர்கா, பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரியபாளையம்: ஆரணி பேரூராட்சி மற்றும் மல்லியங்குப்பம் ஊராட்சி பகுதிகளில் 2022-23ம் நிதியாண்டின் குழந்தை நேயபள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மாணவ, மாணவியருக்கு, இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், மல்லியங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி, ஆரணி திமுக நகர செயலாளர் முத்து, வார்டு கவுன்சிலர் கண்ணதாசன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப் பூண்டி சட்டமன்ற தொகுதி சுண்ணாம்பு குளம், எளாவூர், ஏ.என்.குப்பம் ஆகிய பகுதிகளில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி, தேர்வழி, ரெட்டம்பேடு உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற அலுவலகமும், ஆத்துப்பாக்கம் பூவாலம்பேடு, பெரியபுலியூர் ஆகிய பகுதிகளில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சியில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, சுண்ணாம்புகுளம் ஊராட்சி தலைவர் எஸ்.எம்.ரவி, பிடிஓக்கள் சந்திரசேகர், அமிழ்தமன்னன் ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

அப்போது, ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், மகளிர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர். எளாவூர் மகாலிங்கம் நகர் பகுதியில் அரசு பள்ளி கட்டிடத்தை எளாவூர் ஊராட்சி தலைவர் வள்ளிமுருகேசன், வார்டு உறுப்பினர் தேவி, சங்கர் ரிப்பன் திறந்து வைத்தனர். ஊராட்சி செயலர் சேகர் உடனிருந்தார். தேர்வழி ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஊராட்சி தலைவர் கிரிஜா குமார் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, ஊராட்சி பகுதியைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் முதல்வருக்கும், சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜனுக்கும் நன்றி தெரிவித்தனர்.

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், நேமம் ஊராட்சியில் ஊராட்சி செயலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ஜெ.பிரேம்நாத், துணை பெருந்தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) எஸ்.காந்திமதிநாதன், ஊராட்சி துணை தலைவர் விஜயா ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் என்.உமாசங்கரி நாகராஜ், கே.தமிழழகன், வி.சிவகாமி வடிவேல், எம்.உதயகுமார், எஸ்.முருகன், டி.விஜயா தாமோதரன், எம்.நிரோஷா ரமேஷ், சி.சரவணன், ஊராட்சி செயலாளர் எஸ்.ரீமாவதி பங்கேற்றனர். ஒன்றிய குழு பெருந்தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

வெள்ளியூர் ஊராட்சியில் குழந்தை நேயபள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, மாணவர்கள் பயன்பாட்டிற்காக கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், திமுக ஒன்றிய செயலாளர் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், ஒன்றியக் குழு துணை பெருந்தலைவர் எம்.பார்கத்துல்லாகான், வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் டி.முரளி கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் டி.எம்.எஸ்.வேலு, வருவாய் அலுவலர் பொன்மலர், கிராம நிர்வாக அலுவலர் ராதிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், முத்துகொண்டாபுரம் ஊராட்சியில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார். இதற்கான விழாவில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஓ.என்.சுகபுத்ரா, செயற்பொறியாளர் வ.ராஜவேல், திமுக ஒன்றிய செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன், உதவி திட்ட அலுவலர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விஜயகுமாரி சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் எம்.ரமேஷ், பொறியாளர் ராணி, பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி, திமுக ஒன்றிய நிர்வாகிகள் பி.சரவணன், குமார், கமலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

three − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi