கோவை: கோவையில் கல்வி உதவித்தொகை தருவதாக கூறி மாணவர்களின் பெற்றோர்களிடம் வங்கி எண் வாங்கி மோசடி செய்த கும்பல் கைது செய்யப்பட்டது. கியூ ஆர் கோடு மூலம் பணத்தை வங்கியில் இருந்து திருடிய கும்பல் குறித்து மாணவர்கள் போலீசில் புகார் அளித்தனர். ரூ.7 லட்சம் வரை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு 44 செல்போன்கள், 22 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசின் லோகோவை வாட்ஸ்ஆப்பில் பயன்படுத்தி 500க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்துள்ளனர். தெரியாத எண்களில் இருந்து வரும் செல்போன் அழைப்புகளை நம்பவேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் விவரங்களை சேகரித்து வாட்ஸ்ஆப்பில் பேசியுள்ளனர், மோசடி கும்பல் டெல்லியில் உள்ள உறவினர் மூலம் அந்த மாநில சிம்கார்டுகளை வாங்கி மோசடிக்கு பயன்படுத்தி உள்ளனர். கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் பணம் வரும் என எதிர்பார்த்த பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோனதால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.