விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பதி கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை கைது செய்துள்ளனர். தள்ளுவண்டி கடையில் உணவு சாப்பிட சென்றபோது கலியமூர்த்தி அமர சென்ற நாற்காலியை தள்ளிவிட்டு தாக்கி உள்ளனர். கலியமூர்த்தி அளித்த புகாரை அடுத்து வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து பிரபாகரன், பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.