Tuesday, May 21, 2024
Home » அனுமதி பெறாமல் சவூதி அரேபியா சென்றதால் போட்டிகளில் பங்கேற்க பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு 2 வாரம் தடை

அனுமதி பெறாமல் சவூதி அரேபியா சென்றதால் போட்டிகளில் பங்கேற்க பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு 2 வாரம் தடை

by Porselvi

அர்ஜென்டினா : அனுமதி பெறாமல் சவூதி அரேபியா சென்றதால் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு 2 வாரம் தடை விதித்து அவர் விளையாடும் பிஎஸ்ஜி க்ளப் நடவடிக்கை எடுத்துள்ளது. 35 வயதாகும் மெஸ்ஸி, தற்போது பிரபலமான பிஎஸ்ஜி அணிக்கு விளையாடி வருகிறார். இந்த அணி தற்போது முக்கியமான லீக் போட்டியில் பங்கேற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று லோரியண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணி 1க்கு 3 என்ற கோல் கணக்கில் எதிர்பாராத தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து அணியுடன் பயிற்சியில் ஈடுபட வேண்டிய மெஸ்ஸி, அனுமதி பெறாமல் சவூதி அரேபியா சென்றார். இதனால் கடுப்படைந்த பிஎஸ்ஜி நிர்வாகம், இரண்டு வாரம் போட்டியில் பங்கேற்கவும் பயிற்சியில் ஈடுபடவும் மெஸ்ஸி தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த தடையால் ajaccio, troyes ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

19 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi