சென்னை: பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தியாகராயநகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு சரத்குமார் வருகை தந்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக சரத்குமார் அறிவித்திருந்தார். கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக அண்ணாமலையுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.