Wednesday, May 15, 2024
Home » ஆஸ்திரேலியாவில் கொலையான ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண்

ஆஸ்திரேலியாவில் கொலையான ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண்

by Lakshmipathi

*கணவருக்கு தொடர்பா? போலீசார் விசாரணை

திருமலை : ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள தாபா ஓட்டலில், பெட்டியில் ஐதராபாத் பெண் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள பக்லி பகுதியில் நேற்று முன்தினம் சாலையோர தாபா ஓட்டலில் ஒரு பெட்டியில் பெண் சடலம் ஒன்று இருந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த விக்டோரியா போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு யார் அவர்? என்பது குறித்து முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். இதில் கொலையானவர் தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஏ.எஸ்.ராவ் நகரை சேர்ந்த சுவேதா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு திருமணமாகி 3 வயதில் மகன் உள்ளார்.

சுவேதா ஆஸ்திரேலியாவில் தங்கி பணி செய்து வந்துள்ளார். இதற்கிடையில் சுவேதாவின் கணவர், மகன் இருவரும் ஐதராபாத் சென்றுள்ளனர். இதனையறிந்த மர்ம நபர்கள் சுவேதாவை கொலை செய்துள்ளனர் என்பதும், அவருக்கு தெரிந்தவர்கள் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டது. கொலைக்கான காரணத்தை ஆஸ்திரேலிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சுவேதாவை நோட்டமிட்டு அவருக்கு தெரிந்தவர்களே அவரை கொலை செய்திருக்கலாம் எனவும், கொலைக்குப் பிறகு, அவர்கள் அங்கிருந்து வேறு நாட்டுக்கு தப்பிச் சென்று இருக்கலாம் எனவும், ஸ்வேதாவின் கணவர் தங்கள் மகனுடன் ஐதராபாத் சென்றதாக மெல்போர்னில் உள்ள ஒரு செய்தி சேனல் செய்தி வெளியிட்டது.

தொடர்ந்து இதுகுறித்து தெலங்கானா மாநில போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஐதராபாத் போலீசார் சுவேதாவின் கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சுவேதா கொல்லப்பட்டிருப்பது திட்டம் போட்டு நடந்தது என்றும், இதற்கு காரணம் சுவேதாவின் கணவர் கொலையாளி எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

4 + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi