சென்னை: சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வாகி உள்ள டி.எம்.கிருஷ்ணாவுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். “சிறந்த கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, The Music Academyன் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது வாழ்த்துகள்! சமூகம் சார்ந்த முற்போக்கு சிந்தனையாளரான இவருக்குள்ள அசாத்திய இசைத்திறமையின் அடிப்படையில்தான் விருது கொடுக்கப் படுகிறது. ஆனால், அவர் விருது பெறுவதில் குழப்பம் ஏற்படுத்தும் சிலரின் முயற்சி கண்டிக்கத்தக்கது. அனைவரின் மீதும் அன்பு செலுத்துவோம்” என செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.