மதுரை: சங்கரன்கோவில் அருகே பிள்ளையார்குளத்தில் பத்ரகாளியம்மன் கோயிலை பூட்டி கோயிலுக்கு வருவாய்த்துறையினர் வைத்த சீலை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இரு பிரிவினரிடையே மோதலை தடுக்க பத்ரகாளியம்மன் கோயிலை பூட்டி வருவாய்த்துறை சீல் வைத்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. கோயிலை பூட்டி சீல் வைத்த அதிகாரிகளின் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அரசியலமைப்பு சட்டப்படி ஒரு மனிதரின் வழிபாட்டு உரிமையை அதிகாரிகள் தடை செய்ய முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார். எனவே வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.