சென்னை: சனாதனம் பற்றிய பேச்சுக்காக என்மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைமையின் ஆலோசனையை பெற்று சட்டத்துறை உதவியுடன் வழக்கை எதிர்கொள்வேன். உத்திரபிரதேச சாமியார் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மை எரித்து திமுகவினர் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அவர் கூறினார்.