திருவனந்தபுரம்: கேரளா சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய வேண்டுமென்றால் சார் பதிவாளர் அலுவலகங்களில் முதலில் விண்ணப்பம் செய்ய வேண்டும். திருமணத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில் ஒரு மாதம் கழித்து திருமணம் செய்ய அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கொல்லம் அருகே உள்ள பத்தனாபுரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் திருமணத்திற்காக பத்தனாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இதே இளம்பெண் புனலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் வேறு ஒருவருடன் திருமணம் செய்வதற்காகவும் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுவதால் இந்த விவரம் பதிவுத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனால் எந்த திருமணத்தை நடத்தி வைப்பது என்று சார் பதிவாளர்ள் குழப்பத்தில் உள்ளனர்.
ஒரே நேரத்தில் 2 பேரை திருமணம் செய்ய முயன்ற இளம்பெண்
previous post