சேலம்: ஓமலூர் அருகே பூசாரிப்பட்டியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மர்ம விலங்கு கடித்து 15க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ள நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டம் இருக்கிறதா என ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.