சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக உள்ள சைலேஷ் குமார் யாதவ் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்ட அறிக்கையில், ‘‘சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் சைலேஷ் குமார் யாதவுக்கு பணி மூப்பு அடிப்படையில் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் வகித்து வரும் பதவியிலேயே அவர் தொடர்ந்து பணியாற்றி வருவார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.