மும்பை: சச்சின் டெண்டுல்கர் டீப் ஃபேக் வீடியோ வெளியானது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது மும்பையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் பேட்டி அளிப்பது போன்ற போலி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ தன்னுடையது அல்ல என சச்சின் விளக்கமளித்துள்ளார். ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவிப்பதுபோல் சச்சின் பேசும் போலி வீடியோவால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.