Thursday, May 16, 2024
Home » ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக செயல்படுகிறார் பிரதமர் மோடி: கார்கே விமர்சனம்

ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக செயல்படுகிறார் பிரதமர் மோடி: கார்கே விமர்சனம்

by Dhanush Kumar

பெங்களூரூ: பிரதமர் நரேந்திரமோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கார்கே பேசியதாவது; ஒரு வேளை இந்த நாட்டிற்கு அரசியலமைப்பு இல்லையென்றால் ஜனநாயகத்தை நம்மால் காப்பாற்ற முடியாது. நமது சுதந்திர போராட்ட வீரர்களும், தலைவர்களும் , அரசியலமைப்பு சபை உறுப்பினர்களும் பல்வேறு கடின முயற்சியால் இந்த நாட்டிற்கு அரசியலமைப்பை வழங்கினார்கள். அரசியலமைப்பில் சமத்துவம், சகோதரத்துவம், மதசார்பின்மை மற்றும் நீதி போன்ற முக்கியமான கொள்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்த அரசியலமைப்பை சிதைத்து அதில் மாற்றங்களை செய்வதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ சதி செய்கிறது. நமது சுயாட்சி அமைப்புக்களை ஒவ்வொன்றாக அழிப்பதற்கும், பலவீனப்படுத்துவதற்கும் பாஜ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக நடந்து கொள்கிறார். நமது நீதித்துறை அல்லது நமது மதசார்பின்மை பாதிப்புக்களை எதிர்கொள்கின்றது. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இவ்வாறு கார்கே தெரிவித்தார். குடியரசு தினத்தையொட்டி கார்கே வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வொரு இந்தியருக்கும் அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள அடிப்படை உரிமைகள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றது. மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கும், உண்மையை மறைப்பதற்கும் உணர்ச்சிகரமான பிரச்னைகளை அரசு பயன்படுத்துகிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

14 − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi