சென்னை: ரூ.500 கோடியில் 552 புதிய தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. 552 புதிய தாழ்தள பேருந்துகள் ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் கொள்முதல் செய்ய ஆணையிட்டுள்ளார். பேருந்து சேவையை பூர்த்தி செய்ய, அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளார்.
போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 352, கோவை 100, மதுரை 100 என மொத்தமாக 552 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். அரசு போக்குவரத்து கழகங்களின் மூலம் வழங்கப்படும் பொது பேருந்து சேவை நாட்டில் முதன்மையான நிலைக்கு உயரும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.