டெல்லி: கோவையில் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் பங்கேற்ற விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பா.ஜ.க. நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு உதவி தேர்தல் நடத்தும் 5 அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.