Monday, June 10, 2024
Home » கே.கே.நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ‘மாஸ்டர்’ பட நடிகையின் காஸ்ட்லி செருப்பு திருட்டு: பைக்கில் வந்து கைவரிசை காட்டிய 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலை

கே.கே.நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ‘மாஸ்டர்’ பட நடிகையின் காஸ்ட்லி செருப்பு திருட்டு: பைக்கில் வந்து கைவரிசை காட்டிய 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலை

by MuthuKumar

சென்னை: நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் நடிகை ஒருவரின் விலை உயர்ந்த செருப்புகளை திருடி சென்ற 2 வாலிபர்களை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர். சென்னை கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சங்கீதா. திரைப்பட நடிகையான இவர், விஜய் நடித்த ‘மாஸ்டர்’ மற்றும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சங்கீதா வசித்து வரும் குடியிருப்பு வீட்டின் முன்பு அவரது விலை உயர்ந்த செருப்புகள் தொடர்ச்சியாக மாயமாகி வந்தது.

ஆனால் புதிதாக வாங்கிய விலை உயர்ந்த செருப்பை அவர் 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பு விட்டிருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது, அந்த செருப்பு மாயமாகி இருந்தது. இதனால் நடிகை சங்கீதா, சிசிடிவி பதிவுகளை பார்த்தார். அதில், 2 வாலிபர்கள் விலை உயர்ந்த பைக்கில் வந்து, நடிகை சங்கீதா வசிக்கும் வீட்டின் முன்பு விடப்பட்டிருந்த செருப்புகளை திருடி சென்றது தெரியவந்தது. இதனால் நடிகை சங்கீதா, கே.கே.நகர் காவல் நிலையத்தில் சிசிடிவி பதிவுகளுடன் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் 2 வாலிபர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே நடிகை சங்கீதா நேற்று முன்தினம் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பதிவு செய்தார்.

அதில், நடிகை சங்கீதா பேசுகிறேன். நேற்று எனது வீட்டில் ஒரு நிகழ்வு நடந்தது. இது பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக இந்த வீடியோவை நான் பதிவு செய்கிறேன். நான் அடுக்குமாடி குடியிருப்பில் தான் இருக்கிறேன். அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாப்பு என்பதால் இங்கு இருக்கிறோம். ஆனால் நேற்று மதியம் 2 பையன்கள் ரொம்ப கூலாக, ஏதோ திருடுவதற்காக இங்கு வந்து. எதுவும் கிடைக்காமல், என் வீட்டில் இருந்த விலை உயர்ந்த செருப்பைகளை எடுத்துக்கொண்டு போராங்க. இது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கு. நான் இதை பெரிது படுத்துவதற்காக பேசவில்லை. என்ன விஷயம் என்றால், மதியம் வேலையில் எல்லா வீட்டிலும் உறவினர்கள் இருப்பாங்க.

அப்படி இருக்கும் போது, இவ்வளவு தைரியமாக 2 பேர் வந்துவிட்டு போறாங்க. நான் இதை உங்களிடம் ஷேர் செய்யாமல் விட்டால். இதற்கு மேல் அவர்கள் என்ன வேண்டும் என்றாலும் பன்னுவாங்க. ‘ஒரு வேலை அவர்கள் என்ன எதிர்பார்த்து வந்தார்களோ. அது கிடைக்காமல் செருப்புகளை எடுத்து சென்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை’. எனக்கு இந்த விஷயத்தை பகிர வேண்டும் என்று தோண்றியதால் நான் இதை ஷேர் செய்கிறேன்.

You may also like

Leave a Comment

2 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi