சென்னை: வரும் மக்களவை தேர்தலில் 25 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட அதிமுக முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் போட்டியிடும் சிறிய கட்சிகளின் வேட்பாளர்களை இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தவும் அதிமுக முடிவு. எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை, சமத்துவ
மக்கள் கட்சிக்கு நெல்லை தொகுதியை அதிமுக ஒதுக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.