சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் வி.எச்.பி. முன்னாள் நிர்வாகி மணியனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. வி.எச்.பி. முன்னாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியனை செப்.27 வரை சிறையில் அடைக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நிகழ்ச்சியில் அம்பேத்கர்,திருவள்ளுவர் பற்றி அவதூறாக பேசியதாக மணியன் மீது விசிக முன்னாள் நிர்வாகி இரா.செல்வம் புகார் அளித்தார்.