தெலுங்கானா: தென் மாநிலங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2.5 கோடி மதிப்பிலான நகைகளை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அக்பர் குரேஷி, முகமது செரீப் உள்ளிட்ட 4 பேரை வாராங்கல் காவல்துறையினர் கைது செய்தனர். குறிப்பாக வாராங்கல், ஆந்திராவின் சில இடங்களில் வீடுகளில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர்.
கைது செய்யப்பட்ட 4 கொள்ளையர்கள் மீது ஏற்கனவே 32 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தீவிர தேடுதலுக்கு பிறகு இவர்கள் சிக்கி இருப்பதாக காவல்துறை தகவல். தெரிவித்திருக்கிறது இதையடுத்து 4 கொள்ளையர்களிடம் இருந்து ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க, வைரம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், பிரான்ஸ் நாட்டு துப்பாக்கி மற்றும் கஞ்சா பொட்டலங்களையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றி இருப்பதாக போலீசார் கூறியிருக்கிறார்கள். கைதான 4 கொள்ளையர்களும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.