Monday, June 17, 2024
Home » நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு: 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன்

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு: 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன்

by Neethimaan

நெல்லை: நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூர் பகுதியைச் சேர்ந்த, நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங் (60), மர்மமான முறையில் இறந்தார். அவரது தோட்டத்தில் கடந்த 4ம் தேதி சடலம் மீட்கப்பட்டது. அவர் எழுதி வைத்திருந்திருந்த இரு மரண வாக்குமூல கடிதங்களின் மூலம் 40க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு கடந்த 23ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி, மூத்த மகன் கருத்தையா ஜெப்ரீன், 2வது மகன் ஜோமார்ட்டின், மகள் கேத்தலின் ஆகியோர் கடந்த 25ம் தேதி நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த மரண வாக்குமுல கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி வழக்கு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் நேரில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

16 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi