சென்னை: அயனாவரத்தில் லேப்டாப்-ல் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் சரணிதா (32) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக உள்ள சரணிதா, எம்டி முடித்து பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக சரணிதா பணிபுரிந்து வந்துள்ளார்.