நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விபத்துக்குள்ளான பட்டாசு குடோனின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டணம் சாலையில் கண்ணன் என்பவரின் குடோனில் பட்டாசு வெடித்து 3 பேர் காயமடைந்த நிலையில் ஆய்வு நடத்தப்பட்டது. வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய ஆய்வையடுத்து குடோன் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.