புதுடெல்லி: நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்பான ஆபாச வீடியோவை வெளியிட்ட 4 பேரை ெடல்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாலிவுட் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் ஆபாச வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்து மற்ற பாலிவுட் நடிகைகளான கேத்ரினா கைப், கஜோல், அலியா பட் ஆகியோரின் டீப் ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா தொடர்பான டீப் ஃபேக் ஆபாச வீடியோவை வெளியிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கு தொடர்பாக தற்போது நான்கு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து டெல்லி காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்பான டீப் ஃபேக் வீடியோ விவகாரம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களை கைது செய்து விசாரித்து வருகிறோம். இவர்கள் நால்வரும் போலி வீடியோவை பதிவேற்றியவர்கள். மற்றபடி இந்த வீடியோவை இவர்கள் உருவாக்கவில்லை. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.