Thursday, May 9, 2024
Home » ராணிப்பேட்டை அருகே 2 பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை..!!

ராணிப்பேட்டை அருகே 2 பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை..!!

by Lavanya

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த அம்மூர் ரயில் நிலையத்தில் குடும்பத்தகராறு காரணமாக பெண் ஒருவர் தனது இரு பெண் குழந்தைகளுடன் சென்னை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மூர் அடுத்த வேலம் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் இவர் தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

இவருடைய மனைவி வெண்ணிலா இவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல குடும்ப தகராறு ஏற்படும் போது மனமுடைந்த வெண்ணிலா தன்னுடைய 7 வயது மகள் தார்நிகா மற்றும் 5 வயது மகள் தனுஸ்ரீ ஆகிய இருவரையும் அழைத்து கொண்டு வாலாஜாபேட்டை அம்மூர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு சென்னையை நோக்கி சென்ற ரயிலுக்கு முன்பாக திடீரென்று விழுந்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவத்தில் பெண் மற்றும் இரு குழந்தைகள் ஆகிய மூவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தற்போது அவர்களுடைய உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

three × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi