சென்னை: சென்னையில் நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்த 5 வயது சிறுமிக்கு இன்று பிளாஸ்டிக் சர்ஜரி நடைபெறுகிறது. ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. 5ம் தேதி நுங்கம்பாக்கம் பூங்காவில் வளர்ப்பு நாய்கள் கடித்ததில் சிறுமி படுகாயம் அடைந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த சிறுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.