கர்நாடகாவின் தர்வாடில் நடக்கும் ஐடிஎப் ஆடவர் உலக டென்னிஸ் டூர் போட்டி நடக்கிறது. அங்கு நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன், பிரஜ்வால் தேவ் ஆகியோர் மோதினர். அதில் ராம்குமார் 6-4, 4-6, 6-1 என்ற செட்களில் பிரஜ்வாலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
* செமி பைனலில் மேரி
சீனாவில் நடைபெறும் ஜியாங்சி ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. அதில் மேரி பவுஸ்கோவா,கேத்ரினா சினியக்கோவா,(செக் குடியரசு), லெய்லா பெர்னாண்டஸ்(கனடா), டயனா ஷ்னய்டர்(ரஷ்யா) ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.