ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தையை பார்க்க வந்த போது அரசு பேருந்து மோதி காவலர் கணேசன் உயிரிழந்துள்ளார். குழந்தையை பார்த்துவிட்டு திரும்பிய நிலையில் தபால் சாவடி அருகே அரசு பேருந்து மோதி காவலர் உயிரிழந்துள்ளார். பெரியார் நகரை சேர்ந்த கணேசன் சென்னை வளசரவாக்கத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார்.