டெல்லி: 3-ம் கட்டமாக குஜராத், கர்நாடகா, மராட்டியம் உள்பட 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்குள் வாக்குசாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
3-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 93 தொகுதிகளில் 1,351 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காந்திநகரில் அமித்ஷா, விதிஷா தொகுதியில் சிவ்ராஜ் சிங் சவுகான், குணா தொகுதியில் ஜோதிராதித்ய சிந்தியா, ஹவேரி தொகுதியில் பசவராஜ் பொம்மை, துப்ரி தொகுதியில் பத்ருதீன் அஜ்மல் ஆகியோர் போட்டியிட்டனர்.