திருச்சி: திருச்சி மாவட்டத்தில் திருவானைக்காவல் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஆற்றில் 4 பேர் குளித்த நிலையில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நீரில்மூழ்கி விஷ்ணுபிரசாத் என்பவர் உயிரிழந்துள்ளார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் இருவரை தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.