விருதுநகர்: ராஜபாளையத்தில் பச்சிளம் ஆண் குழந்தையை விற்ற தாய் முத்துசுடலி உட்பட 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையை ரூ.3லட்சத்துக்கு விற்ற ராஜேஷ்வரி, ரேவதி, அசினா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பச்சிளம் குழந்தையை விற்ற வழக்கில் தொடர்புடைய ஜெயபால் என்பவருக்கு காவல்துறையினர் வலைவீசி வருகின்றனர்.