புதுச்சேரி: மழை எதிரொலியால் புதுச்சேரி கடற்கரை சாலையில் பொது மக்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். கடற்கரை சாலையில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், கடலில் குளிக்க தடை விதித்து ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.