டெல்லி: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநில பேரிடர் மீட்புப் படை 2வது தவணையின் ஒன்றிய அரசின் பங்கான ரூ.450 கோடியை முன்கூட்டியே விடுவித்துள்ளது.