டெல்லி: இந்தியா மிகவும் முக்கியமான தருணத்தில் இருக்கிறது. நாட்டை கட்டி எழுப்பியவர்கள் யார்?, சீரழித்தவர்கள் யார்? என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும் என நாட்டு மக்களுக்கு எம்.பி. ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் குடிமக்களாகிய உங்களது எதிர்காலம் உங்கள் கைகளில் இருக்கிறது. எனவே வாக்களிப்பதற்கு முன்பு நன்கு சிந்தித்து புரிந்து கொண்டு பிறகு சரியான முடிவை எடுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.